*விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !*
கணபதியின் உருவத்தின் அர்த்தங்கள் !
பெரிய தலை – பெரியதாக சிந்தித்தல்.1ம் படி வெற்றிக்கான முதல்படி பெரிய அளவில் யோசிப்பது
பெரிய காதுகள் – நிறைய கேள்- மற்றவர் பேசுவதை எந்தவித குறுக்கீடும் செய்யாமல் கேட்டல். 2ம் படி
சிறிய கண்கள் – கூர்மையான கவனம். 3 ம் படி- மனதை திசை திருப்பாமல், எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிறுத்துதல்.
சிறிய வாய் – குறைவாக பேசுதல் – 4 ம் படி – நிறைய கேட்க வேண்டும், படிக்க வேண்டும் ஆனால் குறைவாக பேச வேண்டும். குறைவாகவும், அளந்தும் பேசுபவருக்கு வார்த்தைகள் சொந்தம் / கட்டுப்படும் அல்லாவிடில் வார்த்தைகளுக்கு அவர் கட்டுப்படவேண்டி இருக்கும். இதைத் தான் திருவள்ளுவர் “நா காக்க, காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற சிக்கனமாக சொன்னார்.
ஏகதந்தம் – ஒரு தந்தம் – 5ம் படி – கெட்டதை விலக்கி நல்லதை எடுத்துக் கொள்ளல். நான்காம் படி, குறிக்கோளை அடையும் வழியில் நல்லது, கெட்டது இரண்டும் வரும். அப்போது கெட்டதை விலக்கி நல்ல வழியில் செல்ல வேண்டும்.
தும்பிக்கை – தும்பிக்கை விநாயகரின் ஐந்தாவது கரமாக கருதப்படுகிறது. ஐந்து கரத்தனை, ஆனை முகத்தானை என்று அவரை வழிபடுவதுண்டு. திறமை மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை – 6ம் படி – திறமையும் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையும் மிகவும் இன்றியமையாதது.
கோடரி – அறுத்தல் – பாசம், பந்தம் போன்ற கட்டுப்பாடுகளை அறுத்தல் – 7ம் படி – இதன் அர்த்தம் ஒரு கர்மயோகியைப் போல் லட்சியத்தை (அ) குறிக்கோளை அடைய செயல்படுவது. அதில் இந்த கட்டுப்பாடுகளினால் வரும் தடைகளை ஒரு பற்றற்ற துறவியைப் போல் விலக்குதல்.
கயிறு – வாழ்வின் உண்மையான குறிக்கோளுக்கு இழுத்துச் செல்ல.- 8ம் படி – பெரிதாக யோசித்து சாதிக்க வேண்டிய காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிலைநிறுத்தினால், குறிக்கோளை அடைய வழிகள் தன்னால் பிறக்கும்.
அபயம் / வாழ்த்தும் கை – வாழ்த்துதல் – 9ம் படி – விநாயகரின் அபய ஹஸ்தம் தன் பக்தர்களை காக்கும் கவசம். அவர்களின் பக்தி வழியில் வரும் எல்லா தடங்கலையும் விலக்கி அவர்களை உய்விக்கும் ஒரு வரப்பிரசாதம். – வந்தவர்களை எப்போதும் நன்றாக கவனித்து, வேண்டியவற்றை தன்னால் இயன்ற அளவில் செய்தல்.
பெரிய வயிறு – ஜீரணிப்பதற்கு – 10ம் படி – தன் குறிக்கோளை அடையும் வழியில், எத்தகைய துன்பம் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் பொறுமையாக சகித்து ஜீரணித்தல்.
மோதகம் (கொழுக்கட்டை) – பலன்கள் – 11ம் படி – மேல் சொன்ன படிகளின் படி சென்றால் கிடைக்கும் பலன்கள் கொழுக்கட்டை எப்படி இனிக்கின்றதோ அது போன்ற தன்மை உடையது.
மூஞ்சுறு – வாகனம் – ஆசைகள் – 12 ம் படி – ஆசைகள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஆசையை கட்டுப்படுத்தாமல் அதன்படி நடந்தால் நம்மை கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். ஆகையால் ஆசையை கட்டுப்படுத்தி அதை நம் வழிக்கு திருப்பி நடந்தால் அது நாம் அடைய வேண்டிய குறிக்கோள் என்ற இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்.
பிரசாதம் – பழங்கள் – மேல் சொன்ன வழிகளின் படி நடந்தால், இந்த உலகமே வசப்படும் மற்றும் நமக்காக காத்திருக்கும்.
கஜமுக பாத நமஸ்தே !
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !
ரணத்க்ஷúத்ர கண்டாநிநாதாபிராமம்
சலத்தாண்டவோத் தாண்டவத் பத்மதாளம்
லஸத் துந்திலாங்கோ பரிவ்யாள ஹாரம்
கணாதீச மீசான ஸுனும்தமீடே
சர்ப்ப அலங்காரத்துடன், சிறு மணிமாலைகளைக் கழுத்தில் அணிந்து, அதன் அசைவால் ஏற்படும் நாதத்துடன் கையில் ஏந்திய தாமரை மலரின் தாளத்தாலும் மகிழ்ந்து, நர்த்தனம் புரியும் தாண்டவ கணபதியை போற்றுகிறேன்.
த்வனி த்வம்ஸ வீணா லயோல்லாஸி வக்த்ரம்
ஸ்புரச் சுண்ட தண்டோல்லஸத் பீஜபுரம்,
கலத்த்ர்ப்ப ஸெளகந்த்ய அலோலாலி மாலம்
கணாதீசமீ சானஸுனும் தமீடே.
மிக மதுரமான வீணாகானத்தையொத்த குரல் உடையவரும், அழகிய முகவிலாசத்தையுடையவரும், துதிக்கையில் மாதுளை பழத்தை ஏந்தியவரும், நர்த்தனத்தில் ஏற்பட்ட மதஜல நறுமணத்தை நுகர சுற்றும் வண்டுகளுடன் கூடியவரும், கணங்களுக்கு அதிபதியுமான சிவகுமாரனை போற்றுகிறேன்.
ப்ரகாசஞ் ஜபா ரக்த ரத்ன ப்ரஸுன
ப்ரவாள ப்ரபாதாருண ஜ்யோதிரேகம்
ப்ரலம்போதரம் வக்ரதுண்டைக தந்தம்
கணாதீச மீசான ஸுனும் தமீடே.
செம்பருத்தி புஷ்பம் போன்றும், உதய சூரியனைப் போன்ற சிவந்த ஒளியைப்போல் பிரகாசிப்பவரும், பெருத்த வயிற்றையுடையவரும் வளைந்த தும்பிக்கையுடன் கூடிய முகத்தையுடைய கணாதிபதியான சிவகுமாரனைத் துதிக்கிறேன்.
விசித்ர ஸ்புரத் ரத்னமாலா கிரீடம்
கிரீடோல்லஸத் சந்த்ரரேகா விபூஷம்,
விபூஷைக பூஷம் பவத்வம்ஸ ஹேதும்
கணாதீச மீசான ஸுனும் தமீடே.
பலவிதமான ஜ்வலிக்கும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மகுடத்தை உடையவரும், ஒளி வீசும் பிஞ்சு மதியை தலையில் தரித்தவரும், பிறவி என்ற மாயை இல்லாதவரும் கணங்களுக்கு ஈசனான சிவகுமாரனைப் போற்றுகிறேன்.
உதஞ்சத் புஜா வல்லரீத்ருச்ய மூலோச்
சலத் ப்ரூலதா ளிப்ரம ப்ராஜக்ஷம்
மருத்ஸுந்தரி சாமரை: ஸேவ்ய மானம்
கணாதீசம்சான ஸுனும் தமீடே.
ஓங்கி வளருமம் கொடிகள் போல் தூக்கி கரங்களை உடையவரும், சுழலுகின்ற கருமை வாய்ந்த புருவ மத்தியில் சுழ<லுகின்ற கருவிழிகளை உடையவரும், தேவ கன்னிகள் சூழ்ந்து சாமரம் வீசிக் கொண்டு இருப்பவர்களுடன் கூடிய கணங்களின் ஈசன் சிவகுமாரனைத் துதிக்கிறேன்.
ஸ்புரன் நிஷ்டுராலோல பிங்காக்ஷிதாரம்
க்ருபா சோம லோதார லீலாவதாரம்,
கலாபிந்துசம் கீயதே யோகிவர்யை:
கணாதீச மீசான ஸுனும் தமீடே.
சிவந்த கண்களுடன் அரக்கர்களை அழிப்பவரும், பக்தர்களை கருணையுடன் காப்பாற்றுபவரும், பற்பல அவதாரங்களை விளையாட்டாக செய்பவரும், ஜோதி ஸ்வரூபமானவரும், ஞானி, யோகிகளால் துதிக்கப்படுபவருமான கணங்களின் ஈசனைப் போற்றுகிறேன்.
யமேகாக்ஷரம் நிர்மலம் நிர்விகல்பம்
கணாதீச மானந்தமாகார சூன்யம்,
பரம் பாரமோங்கார மாம்னாய கர்ப்பம்
வதந்தி ப்ரகல்பம் புராணம் தமீடே.
வேதங்களுக்கெல்லாம் மூலவரும், உருவமற்றவரும், விகல்பம் இல்லாதவரும், அழிவு இல்லாதவரும் ஒன்றானவரும், சச்சிதானந்த பரமான புருஷருமான ஓங்கார ஸ்வரூபியான கணபதியை வணங்குகிறேன்.
சிதானந்த ஸாந்த்ராய சாந்தாய துப்யம்
நமோ விஸ்வகர்த்ரேச ஹர்த்ரேச துப்யம்,
நமோ ஆனந்த லீலாய கைவல்ய பாஸே
நமோ விஸ்வபீஜ ப்ரஸிதே சஸுநோ.
ஞானத்தையே <உருவமாகக் கொண்டவரே சாந்த ஸ்வரூபியே, படைத்து, அழித்தும், பல திரு விளையாடல்களை நிகழ்த்துபவரே, முப்பாலையும் கடந்து ஒன்றானவரே வணங்குகிறேன்.
(பல ஸ்ருதி)
இமம் ஸுஸ்தவம் ப்ராதருத்தாய பக்த்யா
படேத் யஸ்து மர்த்யோ லபேத் ஸர்வகாமான்
கணேச ப்ரசாதேன ஸித்யாந்த சாவ:
கணேச விபௌ துர்லபம் கிம் பிரஸ்னே.
இந்த எட்டு ஸ்லோகத்தையும் பக்தியுடன் சொல்லுகிறவர்கள் எண்ணிய எண்ணம் எல்லாம் நடைபெறும், கல்வி வளரும், ஞானம் உண்டாகும், செல்வம் பெருகும், கணேசரின் அருள் கிட்டும்.
முடிவில் அவர்தம் திருவடி தரிசனமும் கிடைக்கும்.
ஓம் கணேசாய நம:
*விநாயக பெருமானின் அருளை பெற உதவும் ஸ்லோகங்களை பாடிப் பலன் அடையலாம்.*
🌺 *ஸ்லோகம் 1 :*
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
🌺 *ஸ்லோகம் 2 :*
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
🌺 *ஸ்லோகம் 3 :*
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
🌺 *ஸ்லோகம் 4 :*
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
🌺 *ஸ்லோகம் 5 :*
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
🌺 *ஸ்லோகம் 6 :*
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.
🌺 *ஸ்லோகம் 7 :*
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
🌺 *ஸ்லோகம் 8 :*
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.
🌺 *ஸ்லோகம் 9 :*
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
🌺 *ஸ்லோகம் 10 :*
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
🌺 *ஸ்லோகம் 11 :*
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.
🌺 *ஸ்லோகம் 12 :*
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.